திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பணி செம்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே.

பொருள்

குரலிசை
காணொளி