மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம்
பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா
விரும்பினனே.