பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
அருளிலர்போலும்;
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்;
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.