புத்தர், பொய் மிகு சமணர், பொலி கழல் அடி இணை
காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமைத் திகழ்ந்த நல்
செழுஞ்சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர், செறிந்த நல்மாமலர் கொண்டு,
"முத்தனே, அருள்!" என்று முறைமை செய் காழி நன்நகரே.