பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது
இலை அவை எதிரே
வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர்
கெட அருகு அரனே!
கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர்
இறை தரும் அருகே
மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம்,
ஒழியே.