திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு
ஊர்ந்த பெம்மானை, “எம்மான்!” என்று
பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை,
முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து
எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை,
சித்தனை, என் திரு முதுகுன்று உடையான்
தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி