பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்” என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை, “காணக் கண் அடியேன் பெற்றது” என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன்
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .