பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர் பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே; மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும் செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால் வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே.