திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல் செய்யில்
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன; கோலம் மல்கும்
செருடக் கடிமலர்ச் செல்வி தன் செங்கமலக்கரத்தால்
வருடச் சிவப்பன-மாற்பேறு உடையான் மலர் அடியே.

பொருள்

குரலிசை
காணொளி