பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பாண்டிக்கொடுமுடி
வ.எண் பாடல்
1

சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,
அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்
பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி
நட்டனை, தொழ, நம் வினை நாசமே.

2

பிரமன் மால் அறியாத பெருமையன்,
தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான்,
பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி
கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!

3

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.

4

தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்;
காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு;
பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.

5

நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக்
கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.