பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர் பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி நட்டனை, தொழ, நம் வினை நாசமே.
பிரமன் மால் அறியாத பெருமையன், தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான், பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனு மித்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே.
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்; காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு; பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக் காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.
நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக் கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.