புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி
பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்?
"முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்!" என்று இமையோர் பரவிடும்
அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!