புற்று ஆடு அரவம்(ம்) அரை ஆர்த்து உகந்தாய்! புனிதா! பொரு வெள் விடை ஊர்தியினாய்!
எற்றே ஒரு கண் இலன், நின்னை அல்லால், நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
மற்றே ஒரு பற்று இலன்; எம்பெருமான்! வண்டு ஆர் குழலாள் மங்கை பங்கினனே!
அற்று ஆர் பிறவிக் கடல் நீந்தி ஏறி, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .