“அஞ்சினார்க்கு அரண் ஆதி” என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
“அஞ்சல்!” என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.