திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று,
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்
மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.

பொருள்

குரலிசை
காணொளி