திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான் தன்னைச்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே.

பொருள்

குரலிசை
காணொளி