திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி
மேல்படுகலில், மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவு ஆர் பனங்காட்டூர்,
"ஆய்ந்த நால்மறை பாடி ஆடும் அடிகள்!" என்று என்று அரற்றி, நல் மலர்,
சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே!

பொருள்

குரலிசை
காணொளி