செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர்,
கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி
அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே!