கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல்
போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை
பிறைநுதலவளொடும் உடன் ஆய
“கொடிது” எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன்
நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே.