திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும்
கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும்
செம்மையார்; நம்மை ஆள் உடையார்
விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண்
செருந்தி, செண்பகத்தின்
குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ்
கோணமாமலை அமர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி