திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
“விடுக்கிற்பிரால்!” என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கல் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!

பொருள்

குரலிசை
காணொளி