திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

பொருள்

குரலிசை
காணொளி