வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை,
பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை,
அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்த ஆறே!