உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி; உரையால்
உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி; வானவர்கள்
தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி; அகலம்
அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி-கமழ்
வீரட்டானக் காபாலி(ய்) அடி;