ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,
அழல் ஆகி, அவியும் ஆகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய்,
வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, பூக்குளால்
வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர்
ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.