நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள்
மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; மறை
நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்;
பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
“என் ஆனாய்! என் ஆனாய்!” என்னின் அல்லால்,
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.