“ஆக்கும் அழிவும் அமைவும், நீ” என்பன், நான்; “சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ” என்பன், நான்;
“நாக்கும் செவியும் கண்ணும், நீ” என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்-
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .