திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்;
சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .

பொருள்

குரலிசை
காணொளி