திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்!
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா!
மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

பொருள்

குரலிசை
காணொளி