திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்
தலைமகன், திருக்கழிப்பாலை
நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை
இளையவர் மதிமுகத்து உலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப்
பேணி, என் எழில் கொள்வது இயல்பே?