கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி
மேல்முடி தேர்ந்து அளக்கில்லா,
உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல்
அங்கையில் ஏந்திய ஒருவன்-
வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு
மணி அணி மாலை,
இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
பேணி, என் எழில் கொள்வது இயல்பே?