உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும்
சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு
என்று உழல் பெரியவர் பெருமான்-
கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக
வண்டொடு தேன் இனம் முரலும்,
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?