கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும்
வாழ்த்தவும் படுவார்;
நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள
மஞ்ஞை மன்னிய பாங்கர்,
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?