பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல் ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம், நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர் கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர் அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம் கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச் சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர் அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம் எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து போய் உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர் புனல் அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்! ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல் ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள் அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான், ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம் வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய் எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர், ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங் காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன் அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.