வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்
தனோடும் உடன் ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் உளமே
புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
அவர்க்கு மிகவே