தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல்
துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறைஞான
ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத
வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசு
ஆள்வர்; ஆணை நமதே.