பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள் துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின், மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி, உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.