பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்; பார்
திகழப் பலி திரிந்து போதக் கண்டேன்;
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்;
குழை காதில், பிறை சென்னி, இலங்கக் கண்டேன்;
கட்டங்கக் கொடி திண்தோள் ஆடக் கண்டேன்;
கனம் மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்;
சிட்டனைத் திரு ஆலவாயில் கண்டேன்-தேவனைக்
கனவில் நான் கண்ட ஆறே!.