நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள்
சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்;
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்;
கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்;
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்;
ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ்
வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!.