“மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்-
"தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
கடுமையொடு களவு அற்றோமே.