நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண்
அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
“ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து
இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து,
கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம்
ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.