திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

பொருள்

குரலிசை
காணொளி