திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்-
கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

பொருள்

குரலிசை
காணொளி