திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில்-துளங்கும் படியாய்!
க(ள்)ளையே கமழும் மலர்க் கொன்றையினாய்! கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே!
பி(ள்)ளை வெண் பிறையாய்! பிறங்கும் சடையாய்! பிறவாதவனே! பெறுதற்கு அரியாய்!
வெ(ள்)ளை மால் விடையாய்! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.

பொருள்

குரலிசை
காணொளி