பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்,
பொடியணி பூணநூல் அகலம்,
பெருவரை புரைதிண தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு வுதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா!
உருமரு வுதரத் தனிவடந் தொடர்ந்து
கிடந்ததென் உணர்வுணர்ந் துணர்ந்தே.