ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம்,
பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள் ஆயிரம்நூ றாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக் கிறகும், கொன்றையும் துன்று
சென்னிச்சிற் றம்பலக் கூத்தா!
நீர்கொள்செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.