நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா ;
நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன வில்லை ;
மற்றெனக் குறவென் ! மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.