மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார் ;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதி ரனையர் ; வா ழியரோ !
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.