மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர்
திருக்கூடலில் ஆலவாயும்,
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும்,
கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர்,
நல்லூர், பெரும்புலியூர்,
தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்;
மலம் ஆயினதான் அறுமே.