சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து,
தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு
இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம்
மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
மாணிகுழியே.