உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி
மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி
நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது
சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான
நிலனே.